மயிலிறகொன்றிலிருந்து பிரிந்த இந்த வெள்ளை இரவின் ஒளி இருளிலிருந்து நம்மை வெவ்வேறு சொற்களாகப் பிரித்தெடுக்கிறது நீ/நான்/ஞானம்/குற்றம்/பசி என நாம் பெயர் தரித்துக் கொண்ட இரவில் நீ என்பது எப்போதும் போல பிடிக்க முடியாத காற்றும்
நினைவின் மடிப்புகளுக்குள் வெள்ளை முத்தங்களென எறும்பூரும் இந்த நள்ளிரவின் பெயரென்ன? உஷ்ணமான ஆயிரம் மென் சொற்களாகி கவிதைக்குள் உறைந்து போன விரகத்தின் சுவை என்ன?
கவிதை – 01 தொக்கி நிற்கவென இடப்படும் மூன்று புள்ளிகளுக்குள்ளிருந்து முடிவுறாத கவிதையின் அர்த்தங்கள் சிதறுகின்றன தன் பற்றியெழுதப்படாத கவிதையெனக் கோபங்கொண்டு பிடுங்கிய தலைமயிரொன்றால் என்னைக் கட்டிவைக்கிறாள் யசோதரா