புரிய முடியாத கவிதையின் காதலி

என்னுடைய கவிதைகளைப் புரிய முடியாதவளாகவும் கோபம் கொண்டவளாகவும் இரண்டாயிரத்து நானூற்றிப் பத்தாவது தடவையும் காதலி இருந்தாள். நானும் வழமை போல “எனக்கும்தான்” என்று உண்மையைக் கூறி அவளை ஆற்றுப்படுத்த விழைந்தேன்.