Thursday, September 24, 2009

காதலில்லாத ஒன்று

உயிரற்ற நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிற அமைதியில்
அழகான காதலின் இசை மோதி அழிந்துகொண்டிருக்கிறது.

சாயத்தையே கண்டிராத உன்னுடைய ரோஸ் நிற உதட்டினை எண்ணி
நித்திரை அத்தவானப்படுகிறது.

ஒன்றாகவும் பலதாகவும் சேர்த்து வந்த
உன்னுடைய சிரிப்புத்துண்டுகள்
பாம்புப் புணர்ச்சி போல கோடு கோடாகப்பின்னி
இப்போது அவை கலைந்த பெரும் ஓவியமொன்றாகியிருக்கின்றன என்னுடைய சுவர் நிரம்ப...

இதற்கு மேலும் எழுதவியலாத கவிதைகளில் இதையும் ஒன்றாக்கி இத்தோடு முடிகிறது இந்தக் கவிதை

கிட்டத்தில் நீயில்லாத போது எனக்கு மட்டுமென்ன அடங்காத கவிதை

1 கருத்துக்கள்:

இளைய அப்துல்லாஹ் said...

மிகவும் வித்தியாசமாக பிரிவை எழுதியுள்ளாய்