இலங்கையின் தம்புள்ளை நகரில் அமைந்துள்ள
முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலத்தின் மீது 20/04/2012 அன்று (வெள்ளிக்கிழமை )
சிங்கள மதத் தீவிரவாத பிக்குகளின் தலைமையில் தாக்குதல் நடாத்தப்பட்டது
குறித்த பல்வேறு தொடர் செய்திகளை நாம் தொடர்ந்தும் வாசகர்களுக்குப்
பிரசுரித்து வருகின்றோம்.
வெள்ளிக்கிழமை 20/04/2012 அன்று காலை ஐம்பதிற்கும் அதிகமான பௌத்த பிக்குகளின் தலைமையில் ஐநூறுக்கும் அதிகமான ஆயுததாரிகளோடு சுற்றிவளைக்கப்பட்டிருக்கின்ற பள்ளிவாயலை அனைவருமாகச் சேர்ந்து தாக்க முற்பட்டிருக்கின்றனர்.
வெள்ளிக்கிழமையாதலால் தமது வாராந்த தொழுகையினை முன்னெடுப்பதற்குப் பள்ளிவாயலுக்குள் கூடியிருந்த முஸ்லிம்களால் தமது தொழுகை வணக்கத்தினை மேற்கொள்ள முடியாது போனதோடு அவர்களது உயிர்களும் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் பள்ளிவாயல் பிரதேசத்துக்க வந்த இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரும் நிர்வாகத்துறை அதிகாரிகளும் அந்தப் பள்ளிவாயலை விட்டு உடனடியாக முஸ்லிம்கள் வெளியேறுவது மட்டும்தான் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமென்றும் அவ்வாறு வெளியேறாத பட்சத்தில் கூடியிருக்கும் சிங்கள ஆயுததாரிகளை எதிர்த்து பள்ளிவாயிலுக்குள் அச்சுறுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் மக்களுக்கு தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தமது தொழுகை வணக்கத்தினை நிறைவேற்ற முடியாத நிலையில் முஸ்லிம் மக்கள் அப்பள்ளிவாயிலை விட்டும் வெளியேறியுள்ளார்கள்.
அதைத்தொடர்ந்து பள்ளிவாயலுக்குள் அத்து மீறிய பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த அடிப்படைவாதக் கட்சிகளில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச நிர்வாகத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட சிங்கள ஆயுத தாரிகள் பள்ளிவாயலைத் தாக்கி சேதமாக்கியிருக்கின்றனர்.
வெள்ளிக்கிழமை 20/04/2012 அன்று காலை ஐம்பதிற்கும் அதிகமான பௌத்த பிக்குகளின் தலைமையில் ஐநூறுக்கும் அதிகமான ஆயுததாரிகளோடு சுற்றிவளைக்கப்பட்டிருக்கின்ற பள்ளிவாயலை அனைவருமாகச் சேர்ந்து தாக்க முற்பட்டிருக்கின்றனர்.
வெள்ளிக்கிழமையாதலால் தமது வாராந்த தொழுகையினை முன்னெடுப்பதற்குப் பள்ளிவாயலுக்குள் கூடியிருந்த முஸ்லிம்களால் தமது தொழுகை வணக்கத்தினை மேற்கொள்ள முடியாது போனதோடு அவர்களது உயிர்களும் ஆயுத முனையில் அச்சுறுத்தப்பட்டிருக்கின்றன.
இந்நிலையில் பள்ளிவாயல் பிரதேசத்துக்க வந்த இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்புப் படையினரும் நிர்வாகத்துறை அதிகாரிகளும் அந்தப் பள்ளிவாயலை விட்டு உடனடியாக முஸ்லிம்கள் வெளியேறுவது மட்டும்தான் அவர்களுக்குப் பாதுகாப்பாக இருக்குமென்றும் அவ்வாறு வெளியேறாத பட்சத்தில் கூடியிருக்கும் சிங்கள ஆயுததாரிகளை எதிர்த்து பள்ளிவாயிலுக்குள் அச்சுறுத்தப்பட்டிருக்கும் முஸ்லிம் மக்களுக்கு தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து தமது தொழுகை வணக்கத்தினை நிறைவேற்ற முடியாத நிலையில் முஸ்லிம் மக்கள் அப்பள்ளிவாயிலை விட்டும் வெளியேறியுள்ளார்கள்.
அதைத்தொடர்ந்து பள்ளிவாயலுக்குள் அத்து மீறிய பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த அடிப்படைவாதக் கட்சிகளில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச நிர்வாகத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட சிங்கள ஆயுத தாரிகள் பள்ளிவாயலைத் தாக்கி சேதமாக்கியிருக்கின்றனர்.
இன்று சனிக்கிழமை 21/04/2012 அன்று ஏதோ
ஓரிரு முஸ்லிம் அமைச்சர்களின் சொந்தத் தலையீட்டோடு ஜனாதிபதியிடமிருந்தோ
அல்லது சம்பந்தப்பட்டவர்களிடமிருந்தோ எதுவித அறிக்கையோ
எதிர்காலப் பாதுகாப்போ இப்பள்ளிவாயலுக்கும் தம்புள்ளை முஸ்லிம் மக்களுக்கம் வழங்கப்படாத நிலையில் பள்ளிவாயல் திறக்கப்பட்டிருக்கிறது.
எதிர்காலப் பாதுகாப்போ இப்பள்ளிவாயலுக்கும் தம்புள்ளை முஸ்லிம் மக்களுக்கம் வழங்கப்படாத நிலையில் பள்ளிவாயல் திறக்கப்பட்டிருக்கிறது.
இதுதான் இச்சம்பவம் பற்றிய ஆதாரபூர்வமான விவரணச் சுருக்கம்.
இச்சம்பவம் குறித்து மிகவும் ஆவேசப்பட்ட,
நிதானமான, உதிரியான பல கண்டன அறிக்கைகள் பல்வேறு முஸ்லிம்
தரப்புக்களிடமிருந்தும் அரசியல்சார், அரசியல் சாராத
அமைப்புக்களிடமிருந்தும் இலங்கையின் ஏனைய சிறுபான்மைக்
குழுக்களிடமிருந்தும் வெளிவந்திருக்கின்றன.
இருந்த போதிலும் இலங்கை என்பது அனைவருக்குமான நாடு என்கின்ற ஜனநாயக நம்பிக்கையினைத் தருகின்ற அரசியல் யாப்பினையும், அவ் யாப்பின்படி இதில் வாழுகின்ற அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு அரச நிறுவனங்களினால் பாதுகாக்கப்பட்டிருப்பதையும் மாத்திரம் கவனத்தில் கொண்டு இவ்வறிக்கையினூடாக மூன்று முக்கியமான அவதானங்களை முஸ்லிம் சீ என் பொறுப்புடன் வெளியிடுகிறது.
இருந்த போதிலும் இலங்கை என்பது அனைவருக்குமான நாடு என்கின்ற ஜனநாயக நம்பிக்கையினைத் தருகின்ற அரசியல் யாப்பினையும், அவ் யாப்பின்படி இதில் வாழுகின்ற அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டு அரச நிறுவனங்களினால் பாதுகாக்கப்பட்டிருப்பதையும் மாத்திரம் கவனத்தில் கொண்டு இவ்வறிக்கையினூடாக மூன்று முக்கியமான அவதானங்களை முஸ்லிம் சீ என் பொறுப்புடன் வெளியிடுகிறது.
முதலாவது:
இலங்கையென்பது சிங்கள மொழிபேசுகின்றவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் அதே நேரம் சிங்கள மொழி பேசுகின்ற மக்களிடையே பெரும்பான்மையானவர்கள் பின்பற்றுகின்ற மதமே பௌத்தமாகும்.
இலங்கையில் பௌத்தத்தினைப் பின்பற்றுகின்ற மக்களுக்கிருக்கின்ற அதேயளவான அனைத்து சமவுரிமைகளும், அவற்றுக்கான அரச பாதுகாப்பும் ஏனைய எல்லாச் சிறுபான்மை மத நம்பிக்கையாளர்களுக்கும் இலங்கையின் ஜனநாயக அரசியலமைப்பின்படி உரித்துடையதாகும்.
இந்த அடிப்படையோடு இந்த தம்புள்ளைப் பள்ளிவாயல் சம்பவத்தை நோக்கும்போது இதன் பின்னணியில் பல்லின கலாசார பண்பாட்டு ஜனநாயக விழுமியங்களை முற்றாக மறுக்கின்ற வகையிலான ஒரு குறிப்பிட்ட மதத்தின்மீதிருக்கம் அடிப்படைவாத மற்றும் குறுந்தேசியவாதப் போக்கின் வன்முறை வடிவத்தினையேதான் காண முடிகிறது.
இச்சம்பவமானது முழுக்க முழுக்க பௌத்த பிக்குகளால் வழிநடாத்தப்பட்ட தீவிரவாத முன்னெடுப்பு என்பது தெளிவான உண்மையென்றாலும இதை மாத்திரம் கொண்டு முழு பௌத்த மத நம்பிக்கையாளர்களையும் இதே மனநிலை கொண்ட அடிப்படைவாதிகளாகப் பார்க்க முடியாதென்பதில் முஸ்லிம் சீ என் தெளிவாகவிருக்கின்ற அதே நேரம் இந்தப் பள்ளிவாயிலில் தொழுவதற்கிருக்கின்ற முஸ்லிம் மக்களின் மத உரிமை ஆயுத முனையில் மறுக்கப்பட்டபோது அதற்கான பாதுகாப்பை அரச பாதுகாப்புப் பிரிவு வழங்குவதற்கு மறுத்தமையினையே முஸ்லிம் சீ என் கேள்விக்குள்ளாக்குகிறது.
நாட்டின் அனைத்து மக்களின் அனைத்து உரிமைகளுக்கம் அவற்றின் பாதுகாப்புக்குமபொறுப்பாயிருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வுரிமை மீறல் மற்றும் மத அசௌகரியம் குறித்தும் அரச படையினரின் ஏற்றுக்கொள்ள முடியாத பக்கச்சார்பான நடைமுறைக்கும் ஜனநாயக முறையில் பொறுப்புக் கூற வேண்டிவர் என்பதில் நாம் உறுதியாகவிருக்கிறோம்.
ஒரு நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சிங்கள மொழி பேசுகின்றவர்கள் என்பதோ, இலங்கையின் பெரும்பான்மையான பௌத்த மதமே ஆட்சியிலிருக்கின்றது என்பதோ இலங்கையில் வாழும் இன்னொரு சமுகத்தின் மத நம்பிக்கைக்கோ அல்லது அதற்கிருக்கின்ற தார்மீக உரிமைக்கோவெதிராக இலகுவாக அத்துமீறிவிடலாமென்கின்ற மதக் கடும்போக்குவாத மனநிலை வன்மையாகக் கண்டிக்கபபடவேண்டியதோடு ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற சிறுகுழுக்களை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டியதும் இந்தாட்டு சட்ட சிர்வாக நீதித்துறைகளின் காவலர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் கடமையேயாகும்.
இலங்கையென்பது சிங்கள மொழிபேசுகின்றவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் அதே நேரம் சிங்கள மொழி பேசுகின்ற மக்களிடையே பெரும்பான்மையானவர்கள் பின்பற்றுகின்ற மதமே பௌத்தமாகும்.
இலங்கையில் பௌத்தத்தினைப் பின்பற்றுகின்ற மக்களுக்கிருக்கின்ற அதேயளவான அனைத்து சமவுரிமைகளும், அவற்றுக்கான அரச பாதுகாப்பும் ஏனைய எல்லாச் சிறுபான்மை மத நம்பிக்கையாளர்களுக்கும் இலங்கையின் ஜனநாயக அரசியலமைப்பின்படி உரித்துடையதாகும்.
இந்த அடிப்படையோடு இந்த தம்புள்ளைப் பள்ளிவாயல் சம்பவத்தை நோக்கும்போது இதன் பின்னணியில் பல்லின கலாசார பண்பாட்டு ஜனநாயக விழுமியங்களை முற்றாக மறுக்கின்ற வகையிலான ஒரு குறிப்பிட்ட மதத்தின்மீதிருக்கம் அடிப்படைவாத மற்றும் குறுந்தேசியவாதப் போக்கின் வன்முறை வடிவத்தினையேதான் காண முடிகிறது.
இச்சம்பவமானது முழுக்க முழுக்க பௌத்த பிக்குகளால் வழிநடாத்தப்பட்ட தீவிரவாத முன்னெடுப்பு என்பது தெளிவான உண்மையென்றாலும இதை மாத்திரம் கொண்டு முழு பௌத்த மத நம்பிக்கையாளர்களையும் இதே மனநிலை கொண்ட அடிப்படைவாதிகளாகப் பார்க்க முடியாதென்பதில் முஸ்லிம் சீ என் தெளிவாகவிருக்கின்ற அதே நேரம் இந்தப் பள்ளிவாயிலில் தொழுவதற்கிருக்கின்ற முஸ்லிம் மக்களின் மத உரிமை ஆயுத முனையில் மறுக்கப்பட்டபோது அதற்கான பாதுகாப்பை அரச பாதுகாப்புப் பிரிவு வழங்குவதற்கு மறுத்தமையினையே முஸ்லிம் சீ என் கேள்விக்குள்ளாக்குகிறது.
நாட்டின் அனைத்து மக்களின் அனைத்து உரிமைகளுக்கம் அவற்றின் பாதுகாப்புக்குமபொறுப்பாயிருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வுரிமை மீறல் மற்றும் மத அசௌகரியம் குறித்தும் அரச படையினரின் ஏற்றுக்கொள்ள முடியாத பக்கச்சார்பான நடைமுறைக்கும் ஜனநாயக முறையில் பொறுப்புக் கூற வேண்டிவர் என்பதில் நாம் உறுதியாகவிருக்கிறோம்.
ஒரு நாட்டின் பெரும்பான்மையான மக்கள் சிங்கள மொழி பேசுகின்றவர்கள் என்பதோ, இலங்கையின் பெரும்பான்மையான பௌத்த மதமே ஆட்சியிலிருக்கின்றது என்பதோ இலங்கையில் வாழும் இன்னொரு சமுகத்தின் மத நம்பிக்கைக்கோ அல்லது அதற்கிருக்கின்ற தார்மீக உரிமைக்கோவெதிராக இலகுவாக அத்துமீறிவிடலாமென்கின்ற மதக் கடும்போக்குவாத மனநிலை வன்மையாகக் கண்டிக்கபபடவேண்டியதோடு ஒரு ஜனநாயக நாட்டில் இத்தகைய செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற சிறுகுழுக்களை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டியதும் இந்தாட்டு சட்ட சிர்வாக நீதித்துறைகளின் காவலர் என்ற வகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் கடமையேயாகும்.
இரண்டாவது:
இலங்கையில் யுத்தகாலத்திலிருந்து அழிக்கப்பட்டு வருகின்ற இந்து மற்றும் முஸ்லிம் வழிபாட்டிடங்களும் அவற்றின் தொன்ம வரலாறும் இந்நிகழ்வையும் பௌத்த ஆதிக்கவாதத்தின் தொடர் நிகழ்வாகவே அவதானிக்க வைக்கிறது.
பல்லின மக்கள் வாழுகின்ற நாடென்பதே இலங்கையின் வரலாற்றை அலங்கரிக்கின்ற முக்கியமான கருப்பொருளாகவிருக்கின்ற அதே நேரம் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிக்குள் முஸ்லிம்களினதும் இந்துக்களினதும் வரலாற்றுச் சுவடுகளாக நிலைத்திருந்த கோயில் பிரதேசங்கள், நூலகங்கள், பள்ளிவாயல்கள், தர்காக்கள் போன்றவை தெளிவாகவே சிங்கள மத அடிப்படைவாதிகளாலும் அரச ஆயுததாரிகளாலும் அழிக்கப்பட்டு வந்திருந்தும் அது பற்றிய எந்த அரச நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படாது புறக்கணிக்கப்படுவதும் ஆளும் அரசாங்கத்தின் ஜனநாயகத் தன்மையையும் சமவுரிமைத் தத்துவத்தையுமே சந்தேகிக்கச் செய்கிறது.
ஆதற்கான மிகத் தெளிவான இன்னுமொரு சான்றினையே இந்த தம்புள்ளைப் பள்ளிவாயல் சம்பவத்துக்கான காரணத்தை பீ பீ சீ தமிழோசை நிருபர் கேட்டபோது இக்கலவரக் கும்பலுக்குத் தலைமை தாங்கிய பிக்குகளில் ஒருவர் பின்வருமாறு தெரிவிக்கிறார்.
“தலைக்கு மேலால் காகங்கள் பறப்பதை அனுமதிக்கலாம், ஆனால் எங்கள் தலைகளில்; நிரந்தரமாகக் கூடு கட்டி வாழ விடமாட்டோம், இது பௌத்த நாடு, இதனைச் சுத்தப்படுத்த வேண்டும்”
இலங்கையில் யுத்தகாலத்திலிருந்து அழிக்கப்பட்டு வருகின்ற இந்து மற்றும் முஸ்லிம் வழிபாட்டிடங்களும் அவற்றின் தொன்ம வரலாறும் இந்நிகழ்வையும் பௌத்த ஆதிக்கவாதத்தின் தொடர் நிகழ்வாகவே அவதானிக்க வைக்கிறது.
பல்லின மக்கள் வாழுகின்ற நாடென்பதே இலங்கையின் வரலாற்றை அலங்கரிக்கின்ற முக்கியமான கருப்பொருளாகவிருக்கின்ற அதே நேரம் யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதிக்குள் முஸ்லிம்களினதும் இந்துக்களினதும் வரலாற்றுச் சுவடுகளாக நிலைத்திருந்த கோயில் பிரதேசங்கள், நூலகங்கள், பள்ளிவாயல்கள், தர்காக்கள் போன்றவை தெளிவாகவே சிங்கள மத அடிப்படைவாதிகளாலும் அரச ஆயுததாரிகளாலும் அழிக்கப்பட்டு வந்திருந்தும் அது பற்றிய எந்த அரச நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படாது புறக்கணிக்கப்படுவதும் ஆளும் அரசாங்கத்தின் ஜனநாயகத் தன்மையையும் சமவுரிமைத் தத்துவத்தையுமே சந்தேகிக்கச் செய்கிறது.
ஆதற்கான மிகத் தெளிவான இன்னுமொரு சான்றினையே இந்த தம்புள்ளைப் பள்ளிவாயல் சம்பவத்துக்கான காரணத்தை பீ பீ சீ தமிழோசை நிருபர் கேட்டபோது இக்கலவரக் கும்பலுக்குத் தலைமை தாங்கிய பிக்குகளில் ஒருவர் பின்வருமாறு தெரிவிக்கிறார்.
“தலைக்கு மேலால் காகங்கள் பறப்பதை அனுமதிக்கலாம், ஆனால் எங்கள் தலைகளில்; நிரந்தரமாகக் கூடு கட்டி வாழ விடமாட்டோம், இது பௌத்த நாடு, இதனைச் சுத்தப்படுத்த வேண்டும்”
மிகத்தெளிவான மதத் தீவிரவாதத்தை
விதைக்கின்ற இத்தயைதொரு பௌத்த மதகுருவின் வார்த்ததைகள் ஜனநாய நாடொன்றில்
பயங்கரவாதக் குற்றத்துக்கு ஒப்பானது என்பதும் ஜனநாயக சோசலிச நாட்டில்
இத்தகைய முன்னெடுப்புக்கள் ஆளும் அரசாங்கததரப்பினால்
கண்டிக்கப்படவேண்டியதுமாகும்.
மூன்றாவது:
இந்தச் சம்பவம் குறித்த மிக உதிரியானதும் தமது இருப்புக்கு ஆபத்து வந்துவிடாதவகையிலுமான ராஜதந்திர அறிக்கைகள் மாத்திரமே முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடமிருந்த வெளிவந்தவண்ணமிருக்கின்றன.
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் இருப்புக்கு பக்கபலமான பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மந்திரிசபை அமைச்சர்களாகவும் அதிகமான முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தும் கூட மீறப்பட்டிருக்கின்ற உரிமைக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ பாதிக்கப்பட்டு தொழுகை மறுக்கப்பட்ட மக்களுக்கான நீதி ஏற்பாடுகள் குறித்தோ அல்லது உடைத்து சேதப்படுத்தப்பட்டிருக்கின்ற தம்புள்ளைப் பள்ளிவாயல் குறித்தோ இதுவரைக்கும் முஸ்லிம் மக்களுக்கோ உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிய தரப்புக்கோ அவர்கள் எந்தவொரு பொறுப்புவாய்ந்த செய்தியினையும் வெளியிடாது மௌனமாயிருப்பது கண்டிக்கத்தக்கது.
தெளிவாகவே அத்துமீறப்பட்டிருக்கின்ற ஒரு சமுகத்தின் மதவுரிமைக்கு காலந்தாழ்த்திய போலி நியாயங்கள் உரிய நீதியாக அமையமாட்டாது.
அரசியலமைப்புப் பாதுகாப்பளிக்கும் சிறுபான்மையின மக்களின் இத்தகைய உரிமைகள் மீறப்படுகின்ற நிகழ்வுகளுக்க அவ்வாறு காலந்தாழ்த்திய இழுத்தடிப்புக்களால் நீதி கிடைக்காமல் போவதே இலங்கை அரசியல் வரலாற்றில் இன்றுவரை நாம் கண்டுவருகின்ற உண்மையுமாகும்.
இருப்பினும் இலங்கையில் யுத்தத்துக்குப் பிறான அமைதியான வாழ்வு பற்றி சர்வதேசத்துக்கு ஒரு பெரும் பிரமையினை உருவாக்கிவரும் அதே நேரம் இத்தகைய பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்புள்ள ஆளும் அரசாங்கமும் அதன் தலைவரும் உடனடியாக நீதியைப் பெற்றுத்தருகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இத்தகைய சிறுபான்மை மீதான ஆதிக்கவாத மத அடிப்படைவாத அத்துமீறல்களிலிருந்து சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் முஸ்லிம் சீ என் சம்பந்தப்பட் அனைத்துத் தரப்பினரையும் கோருகிறது.
அதே நேரம் பாதிக்கப்பட்டிருக்கின்ற தம்புள்ளை முஸ்லிம் மக்களுக்க இவ்விடயம் தொடர்பில் நீதிகிடைப்பதற்கும் இப்பள்ளிவாயிலுக்கான நிரந்தரமான அரசபாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் நியாயமானதும் அமைதியானதுமான தீர்வு கிடைக்கவும் எம்மோடு கைகோர்க்குமாறு இலங்கையின் அனைத்து அரசியல் சார் சாரா அமைப்புக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இணையத்தளங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
muslimcn.net இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது
இந்தச் சம்பவம் குறித்த மிக உதிரியானதும் தமது இருப்புக்கு ஆபத்து வந்துவிடாதவகையிலுமான ராஜதந்திர அறிக்கைகள் மாத்திரமே முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளிடமிருந்த வெளிவந்தவண்ணமிருக்கின்றன.
தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் இருப்புக்கு பக்கபலமான பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் மந்திரிசபை அமைச்சர்களாகவும் அதிகமான முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தும் கூட மீறப்பட்டிருக்கின்ற உரிமைக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தோ பாதிக்கப்பட்டு தொழுகை மறுக்கப்பட்ட மக்களுக்கான நீதி ஏற்பாடுகள் குறித்தோ அல்லது உடைத்து சேதப்படுத்தப்பட்டிருக்கின்ற தம்புள்ளைப் பள்ளிவாயல் குறித்தோ இதுவரைக்கும் முஸ்லிம் மக்களுக்கோ உரிய நடவடிக்கை எடுக்கத்தவறிய தரப்புக்கோ அவர்கள் எந்தவொரு பொறுப்புவாய்ந்த செய்தியினையும் வெளியிடாது மௌனமாயிருப்பது கண்டிக்கத்தக்கது.
தெளிவாகவே அத்துமீறப்பட்டிருக்கின்ற ஒரு சமுகத்தின் மதவுரிமைக்கு காலந்தாழ்த்திய போலி நியாயங்கள் உரிய நீதியாக அமையமாட்டாது.
அரசியலமைப்புப் பாதுகாப்பளிக்கும் சிறுபான்மையின மக்களின் இத்தகைய உரிமைகள் மீறப்படுகின்ற நிகழ்வுகளுக்க அவ்வாறு காலந்தாழ்த்திய இழுத்தடிப்புக்களால் நீதி கிடைக்காமல் போவதே இலங்கை அரசியல் வரலாற்றில் இன்றுவரை நாம் கண்டுவருகின்ற உண்மையுமாகும்.
இருப்பினும் இலங்கையில் யுத்தத்துக்குப் பிறான அமைதியான வாழ்வு பற்றி சர்வதேசத்துக்கு ஒரு பெரும் பிரமையினை உருவாக்கிவரும் அதே நேரம் இத்தகைய பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களுக்குப் பொறுப்புள்ள ஆளும் அரசாங்கமும் அதன் தலைவரும் உடனடியாக நீதியைப் பெற்றுத்தருகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்காலத்தில் இத்தகைய சிறுபான்மை மீதான ஆதிக்கவாத மத அடிப்படைவாத அத்துமீறல்களிலிருந்து சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் முஸ்லிம் சீ என் சம்பந்தப்பட் அனைத்துத் தரப்பினரையும் கோருகிறது.
அதே நேரம் பாதிக்கப்பட்டிருக்கின்ற தம்புள்ளை முஸ்லிம் மக்களுக்க இவ்விடயம் தொடர்பில் நீதிகிடைப்பதற்கும் இப்பள்ளிவாயிலுக்கான நிரந்தரமான அரசபாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு பாதிக்கப்பட்டிருக்கும் அனைவருக்கும் நியாயமானதும் அமைதியானதுமான தீர்வு கிடைக்கவும் எம்மோடு கைகோர்க்குமாறு இலங்கையின் அனைத்து அரசியல் சார் சாரா அமைப்புக்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இணையத்தளங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
muslimcn.net இணையத்தளத்துக்காக எழுதப்பட்டது